டிசம்பர் 28 அன்று கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. அரசியல் பிரமுகர்கள் திரைத்துறையினர் என பலர் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் புகழ் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு வந்து செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது கூறிய அவர் இன்று முதல் கே கே நகரில் உள்ள தனது அலுவலகத்தில் பசி என்று வருவோருக்கு வயிறார மதிய உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.