ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று பங்குனி உத்திரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் ஒருசில மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏப்.5ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள். தேர்வு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொருந்தாது என அறிவித்துள்ளார்.