தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின் ஆனா சமந்தா அரிய வகை நோய் பாதிப்பினால் அவதிப்பட்டு வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கிய இவர் சில மாதமாக உடல்நிலை சரியில்லாமல் காணப்படுகிறார். இவர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு கருத்து வேறுப்பாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். தற்போது சகுந்தலம படத்தில் நடித்துள்ள சமந்தா இந்த படத்திற்காக அதிகமாக ரிஸ்க் எடுத்துள்ளார். இந்த படம் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சமந்தா தனக்கு தானே நம்பிக்கை கொடுக்கும் விதமாக வார்த்தைகள் அடங்கிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதை நீ விரைவில் குணமடைவாய் என்றும் இந்த ஏழு எட்டு மாதங்களில் நீ மோசமான நாட்களை பார்த்துள்ளாய் என்றும் தனக்குத்தானே தெரிவித்துள்ளார் மேலும் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் தான் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் படியாகவும் மருத்துவமனையில் மற்றும் ஜின் ஒன்றில் ஒர்க் அவுட் செய்யும் படியாகவும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.