உத்தர்காண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதையில் நவம்பர் 12ஆம் தேதி சிக்கிய 41 தொழிலாளர்கள் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 17 நாட்களைக் கடந்து நேற்று மீட்கப்பட்டினர் இதனால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து 41 தொழிலாளர்களில் ஒருவரான ராம் சுந்தர் தாய் தனபதி கூறுகையில் “எனது மகன் காப்பாற்றப்பட்டான் என்று தெரிந்த பிறகு நேற்று தான் எங்களுக்கு தீபாவளி கொண்டாட்டம். எங்கள் கிராமமே நேற்று தீபாவளியை விமர்சையாக கொண்டாடியது” எனக் கூறியுள்ளார்.