திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் வீரமணவாளன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கிராம மக்கள் குடமுழுக்கு செய்வதற்கு முடிவெடுத்து அதற்கான கோவில் திருப்பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுள்ளது.

நேற்று 2-ம் கால  யாக சால பூஜைகள் நடைபெற்றது. அதன் பின் கடங்களை தலையில் சுமந்து சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி குடமுழக்கு  செய்தனர். அதனை தொடர்ந்து வீரமணவாளன் சாமி, பச்சையம்மன், சப்த கன்னிகள், காத்தாயினி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரானதை காண்பிக்கப்பட்டது. இந்த குடமுழக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.