கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமானியம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரை சேர்ந்த ஏழு பேர் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்று கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர். இதில் கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.