ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குஞ்சார்வலசை பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சங்கர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் சாந்தி தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேதாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னார்வலராக செயல்பட்டு வந்தார்.

இவர் பணி முடிந்த பிறகு தன்னுடைய வாக்கினை பதிவு செய்துவிட்டு வெளியே வந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஏற்கனவே தந்தையை இழந்த 2 பெண் குழந்தைகள் தற்போது தாயையும் இழந்து தவித்து வாடுவது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.