விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சி வாரம் தோறும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் எந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்த வாரம் இளையராஜா பாடலை ரசிக்கும் எண்பதுகளில் பிறந்த நபர்கள் மற்றும் தற்போது இளைஞர்களாக இருக்கும் அவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. அப்போது பார்வையற்ற நபர் தனது சோகத்தை வெளிப்படுத்தி பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனைக் கேட்டு கோபிநாத் கலங்கியது மட்டுமல்லாமல் அரங்கமே கண்ணீரில் மூழ்கியது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.