தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியாமணி கடந்த 2004-ம் ஆண்டு பாரதிராஜாவின் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்தப் படத்திற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு பிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த பிரியாமணி அசுரன் பட ரீமேக்கின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் இனி முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை பிரியாமணி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியாமணி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில், இனி முத்தக் காட்சிகளில் நடிப்பது எனக்கு அசவுகரியமாக இருக்கும். ஏனெனில் நான் எனது கணவருக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. கன்னத்தில் முத்தம் கொடுப்பதை தவிர்த்து வேறு எந்த காட்சியிலும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.