தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதேபோல 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இறுதித் தேர்வு நடந்து முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பள்ளிக்கல்வித்துறை பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அதாவது நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு தேர்வில் மொழித்தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது வரும் கல்வியாண்டில் நடக்காமல் தடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இதற்காக நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கிறது. இந்த விவரங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.