நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து நீட்விளக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கோரி வெங்கடேசன் எம்பி கணிதம் எழுதினார். இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி திரௌபதி மூர்மு பதிலளித்துள்ளார்.