பெரம்பலூர் மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் அருகே இன்று நடைபெற இருந்த பாஜக பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். எனினும் கூட்டத்தில் கலந்து கொள்ள எச். ராஜா சென்று கொண்டிருந்தார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைப் போலவே பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மதுராந்தகம் அருகே கைது செய்யப்பட்டார்.