ஐ ஆர் சி டி சி ரயில்வே பயண காப்பீட்டு திட்டம் மூலமாக பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வெறும் 35 பைசா செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். இதன் மூலமாக பயணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பணம் கிடைக்கும். இந்த காப்பீடு திட்டத்தை ஐ ஆர் சி டி சி வழங்குகின்றது.

அதன்படி பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின் போது தங்கள் மதிப்புமிக்க பொருட்களை இழக்கும் போது இழப்பீடு பணத்தைப் பெறலாம். ரயில் பயணத்தில் விபத்து ஏற்பட்டால் பயணிகளுக்கு சிகிச்சைக்கான செலவுகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும். அதனைப் போலவே விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் நாமினிக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.