தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் வெள்ள நீரில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நிவாரண பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் தென் மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தூத்துக்குடியில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் பிறகு வெள்ளை நீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.