தைப்பூசம் நிறைவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் விலையும் அதிகமாக இருந்துள்ளது. சீலா மீன் கிலோ 800 லிருந்து 1000 வரையும் பாறை மீன் கிலோ 350 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மீன் வரத்தும் வழக்கத்தை விட குறைவு என்பதால் சாலையும் 1500 ரூபாய் வரை விலை போய் உள்ளது. மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் அலை மோதிய மக்கள் கூட்டம் தயங்காமல் வாங்கிச் சென்றது. இதனால் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.