புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களம் மலையக்கோவில் தைப்பூச திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளின் திமிலை தழுவி காளையர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் சுமார் 700 காளைகள் பங்கெடுத்துள்ளன. அதேபோன்று 300 மாடுபிடி வீரர்களும் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு கட்டில், பீரோ, சில்வர் குடம் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டு வருகிறது.