நியூயார்க்கின் பிரபல நகை நிறுவனமான ‘டிராக்ஸ் என்ஒய்சி’ உரிமையாளர் மக்சுத் அகாட்ஜானி, தனது பெயரைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக சக நகை வியாபாரியான ‘ஏகேஏஒய் டைமண்ட்ஸ்’ மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு 14 காரட் தங்கம் என்று கூறி 10 காரட் தங்கத்தை விற்று மோசடி செய்ததோடு, விற்பனைக்காகத் தனது பிராண்ட் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் அகாட்ஜானி குற்றம் சாட்டினார். வெளியான வீடியோவில், அவர் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று ஊழியர்களிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், தனது பணத்தைத் திரும்பக் கேட்டு சத்தமிடுவதும் பதிவாகியுள்ளது.

“>

இந்த மோதல் வெறும் வாக்குவாதத்துடன் நிற்காமல் வன்முறையாக மாறியுள்ளது. அகாட்ஜானி வெளியிட்ட மற்றொரு வீடியோவில், அந்த நகைக்கடை ஊழியர்கள் தன்னைத் தாக்கியதாகவும், தனது கழுத்தில் இருந்த சங்கிலியை வைத்தே தன்னைக் கழுத்தை நெரிக்க முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் அடையாளமாகத் தனது கழுத்தில் ஏற்பட்ட தழும்புகளையும் அவர் வீடியோவில் காட்டியுள்ளார். இந்தச் சம்பவம் நகை வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாடிக்கையாளரின் பணத்தை அகாட்ஜானி மீட்டுக் கொடுத்தார். இருப்பினும், இந்த விவகாரம் நியூயார்க் வைரச் சந்தையில் நேர்மை மற்றும் தொழில்முறை ஒழுக்கம் குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.