மத்தியபிரதேசம் மாநிலம் உஜ்ஜயினில் நிமோனியாவில் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை குணமாக வேண்டும் என்பதற்காக யாருடைய பெற்றோர் வயிற்றில் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மருத்துவர் ஒருவர் கூறுகையில், கடும் காய்ச்சல் சளியால் பாதிக்கப்பட்ட பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை கொண்டுவரப்பட்டது.

குழந்தையின் வயிற்றில் சூடு வைக்கப்பட்ட தழும்புகள் இருந்தன. அது குறித்து கேட்டபோது இரும்பு கம்பியால் சூடு வைத்தால் காய்ச்சல் குணமாகிவிடும் என்ற மூடநம்பிக்கையால் குழந்தையின் குடும்பத்தினர் வயிற்றில் சூடு வைத்தது தெரியவந்தது என்று கூறியுள்ளார். மேலும் அவர் மக்கள் மூடநம்பிக்கைகளை விட்டொழிய வேண்டும். இதனால் குழந்தைகளை பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.