டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பை படித்து வந்த நபர் ஒருவர் மேட்ரிமோனியில் திருமணதிற்காக பெண் தேடி இருக்கிறார். இதில் குறிப்பிட்ட பெண் ஒருவரை திருமணம் செய்வது என்று அவருக்கு முடிவானது. அவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருந்த திருமண மகிழ்ச்சியில் பெண்ணும் அவருடைய வீட்டாரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் திடீரென்று திருப்பம் ஏற்பட்டது. அதாவது அந்த நபரும் அவருடைய குடும்பத்தினரும் 25 லட்சம் பணம் மற்றும் சொகுசு கார் ஒன்றை வரதட்சணையாக கொடுக்க வலியுறுத்தியுள்ளனர். பெண் வீட்டார் இதற்கு மறுப்பு தெரிவித்த சூழலில் தேவை காரணம் காட்டி திருமணம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த நபர் அவருடைய சகோதரர் முறை உறவினர் என இரண்டு பேரும் ஒரு நாள் காசியாபாத்தில் உள்ள பெண் ஒருவரும் வீட்டுக்கு சென்று அந்த பெண்ணுக்கு மயக்கம் மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் ஆபாச வீடியோவையும் பதிவு செய்து கொண்டனர். இந்த வீடியோவை வைரலாக்கி விடுவேன் என்று கூறி அந்த நபர் தொடர்ந்து பெண்ணை மிரட்டி பாலில் உறவுக்கு கட்டாயப்படுத்தியதில் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த விவரம் தெரிந்ததும் அந்த நபர் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனை தெரிந்து கொண்ட திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் திருமணம் செய்ய மறுத்துள்ளார். தனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் குற்றவாளியை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.