மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் மேடையில் உரையாற்றினார். அவர் தனது பேச்சை முடித்த பிறகு, மேடை மற்றும் அந்த ‘ரேம்ப் வாக்’ பகுதி மிக நீளமாக (சுமார் 800 மீட்டர்) இருந்ததால், அவ்வளவு தூரம் நடந்து சென்று மகனைப் பார்ப்பது கடினம் என்பது போலக் குறிப்பிட்டார். இதைக் கேட்டவுடன் பதறிப்போன விஜய், ஒரு நொடி கூட யோசிக்காமல் தனது தந்தையை நோக்கி அந்த நீண்ட மேடையில் மின்னல் வேகத்தில் ஓடத் தொடங்கினார்.
After SA Chandrasekhar appa speech he said he can't go to Vj Anna place because it's too long so @actorvijay Anna immediately runs off on this 800m ramp walk without stopping!#ThalapathyVijay Anna!
Podra gommala #JanaNayaganAudioLaunch inga than blast uh blast uh!💥🔥🥳💯🇲🇾 pic.twitter.com/213xeIFFj8
— 💥VJSTR💥 (@kaarthik_vj_str) December 27, 2025
சுமார் 800 மீட்டர் தூரத்தை மூச்சு விடாமல் ஓடிச் சென்ற விஜய், தனது தந்தையை அடைந்ததும் அவரைப் பாசத்துடன் கட்டித் தழுவிக் கொண்டார். பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த இந்த உணர்ச்சிகரமான சந்திப்பு ஒட்டுமொத்த மைதானத்தையே நெகிழச் செய்தது.
