கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மாநில அரசு மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறது என்று கேரள முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள் எனவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, அனைவரும் கவனமாக இருப்பது நிலைமையை சமாளிக்க தேவையான வழியாகும். சுகாதாரத்துறை தயாரித்துள்ள செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.