பொதுவாகவே சீரியலில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்தவர்களாகவே இருப்பார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் இவர்கள் நீண்ட நாட்கள் ஒன்றாக நடித்து வருவதால் இவர்களுடைய நட்பும் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் நண்பர்களாக சுற்றி திரிந்தவர்கள் தான் நடிகை நட்சத்திரா மற்றும் ஸ்ரீநிதி. நண்பர்களாக இருந்த இருவரும் நட்சத்திராவின் திருமணத்தின் போது சண்டையில் பிரிந்தனர். இதன் பின்னர் ஶ்ரீ நிதி சிம்புவை காதலிப்பதாகவும் அவர் வீட்டின் முன் போராட்டம் செய்வதாகவும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது நட்சத்திரா திருமணம் முடிந்து மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவருடைய பழைய சீரியல் நடிகைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உள்ளனர். இவர்கள் செய்யும் சேட்டைகளை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் ஶ்ரீ நிதியோடு நட்சத்திரா சேர்ந்து சண்டையிடுவது போல ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் நீங்க மீண்டும் சேர்ந்துட்டிங்களா? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.