தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடக மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர உள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது