தமிழகத்தில் பொங்கல் விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்ற லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக நாளை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு ஆலோசித்து இன்று மாலைக்குள் அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகலாம் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்..