அதிமுக ஜெயக்குமார் அவர்கள் பேட்டி ஒன்றில் ஜல்லிக்கட்டு குறித்து பேசிய போது “ஜல்லிக்கட்டு தமிழர்களின் திருவிழா. தமிழர்களின் அடையாளம் வீரமும் காதலும். வீரம் இல்லாதவரும் தமிழர் கிடையாது. காதல் இல்லாதவரும் தமிழர் கிடையாது. அந்த வகையில் ஜல்லிக்கட்டு வீரத்தின் சின்னம்.

இப்போது கூட காளையை அழைத்து வாருங்கள் நான் அடக்கி காட்டுகிறேன். அரசியலில் எத்தனை ஓடாத மாடுகள் இருக்கிறது. அதுகளிடம் நான் போவது கிடையாது காளை மாடுகள் வந்தால் தான் அடக்குவேன். ஆகவே வர சொல்லுங்கள் நான் அடக்குகிறேன்” என கூறியுள்ளார்.