தமிழகத்தில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் குவிய உள்ளதால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் கையில் சிறப்பு அடையாள அட்டை ஒட்டப்படும். அதில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, பெற்றோர் கைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இந்த அட்டையை கட்டாயம் வாங்க வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.