புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(நவம்பர் 1 ஆம் தேதி) மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை புதுச்சேரி கடற்கரையில் விடுதலை தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து நவம்பர் 2 ஆம் தேதி கிறிஸ்தவர்கள் கல்லறை திருவிழா நடைபெறவுள்ளது.