திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாவ்சன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் இருந்தும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பருக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.