டெல்லியில் நாளை 90 வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலமாக நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து உள்ளதா என்பது பற்றி கணக்கீடு செய்யப்பட உள்ளது.