மீனவர்களை நாட்டின் முதல் காவலர்கள் என ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த மீனவர் தின விழாவில் கலந்து கொண்ட ஆளுநர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு மீனவர்கள் வரவேண்டும். நாட்டை பாதுகாக்க எத்தனை படை இருந்தாலும் கடலை பாதுகாக்க மீனவர்களால் மட்டும்தான் முடியும் என்று பெருமை பேசினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மீனவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.