ஒவ்வொரு நாளும் பூமியை நோக்கி விண்கற்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விண்கற்களானது  பூமியை நெருங்குகிறது என்று அடிக்கடி எச்சரிக்கை செய்தி வெளியாகி வருகின்றது. விண்கல்லானது பூமி மீது மோதுவதால் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், 3 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்ட விண்கல் ஒன்று, நாளை (ஏப்.26) பூமியை கடக்கவுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அந்த விண்கல் மணிக்கு 62,723 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த விண்கல்லிற்கு, 2006 HV5 என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், விண்கல் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியை அச்சுறுத்தாது என கூறப்படுகிறது.