மதுரையை சேர்ந்த முத்து பூபதி என்பவருடைய கணவர் முத்து கார்த்திக். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. முத்து பூபதிக்கு 15 வயதில் இருந்தே சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் பலனளிக்காததால் திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு நாளுக்கு நாள் சர்க்கரை நோயின் அளவு அதிகரித்ததால் அவரால் அன்றாட வாழ்வில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து அவர் குழந்தையுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.