மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பல்லவன் இல்லம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களது சின்னமான ஒலி வாங்கிக்கு அருகில் இருக்கும் விளக்கு எரியவில்லை என்ற புகாரினால் நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அத்தொகுதியின் வேட்பாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.