திமுகவிற்கு எதிரான மனநிலையை வாக்குகளாக எப்படி மாற்றுவது என்பதே தங்களின் நோக்கம் என அண்ணாமலை கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பிரச்சினையானது பெரும் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலையும், PTR-ம் மாறி மாறி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சென்னையில் பேசிய பாஜக அண்ணாமலை, “ஆடியோ விவகாரத்தில் PTR குற்றவாளி அல்ல, அவர் ஒப்புதல் வாக்குமூலமே அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு போட்டால் ஒரிஜினல் ஆடியோவை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறேன். அதை எப்படி வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளலாம்” என நேரடியாக திமுகவிற்கு சவால் விடுத்துள்ளார்.