பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் மிருணாள் தாக்கூர் தெலுங்கில் வெளியான சீதாராமம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தை தொடர்ந்து ஹாய் நன்னா, தி ஃபேமிலி ஸ்டார் போன்ற தெலுங்கு படங்களில்  நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் சீரியலில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மிருணாள் தாக்கூர் சிக்கனமாக இருப்பது  குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் உடைகள் வாங்குவதற்கு ரூ.2000 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய மாட்டேன். நான் சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவள் கிடையாது. நான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளேன். எனவே ஆடம்பரமான செலவுகளை அதிக அளவில் செய்ய மாட்டேன். நான் இதுவரை டிசைனர் உடைகளை வாங்கியதே கிடையாது. அப்படி அதிக செலவு செய்து வாங்கினாலும் கூட அந்த உடையை ஒரு நாள் மட்டும் தான் போட முடியும். எனவே நான் 2000 ரூபாய்க்கு மேல் உடை வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் 2000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து உடைகள் வாங்க மாட்டேன் என்று கூறியது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.