தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவிட்டு செல்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை ஆட்சியுள்ளனர்.

அதன்படி நடிகர் அஜித் காலையில் முதல் ஆளாக வாக்கு சாவடிக்கு வந்து தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். அதன் பிறகு நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்ற நிலையிலும் வாக்களிப்பதற்காக இன்று சென்னைக்கு வந்து தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். மேலும் இதே போன்று, நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம், ஹரிஷ் கல்யாண், தனுஷ், விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன், வடிவேலு, ஜிவி பிரகாஷ், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதுல்யா ரவி போன்ற பல நடிகர் நடிகைகள் தேர்தலில் வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.