தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நான் பேசும்போது யாராவது பாதியில் எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள் என செல்லூர் ராஜு கிண்டலாக பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது, குடுகுடுப்புக்காரன் பேசும் போது பாதியில் சென்றால் ரத்தம் கக்கி சாவீர்கள் என கூறுவர். அதையேதான் நானும் கூறுகிறேன் என கிண்டலாக பேசியுள்ளார்.