பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர் சாலையில் கயிற்றை கட்டி வாகனங்கள் செல்ல இடையூறு விளைவித்ததோடு சாலையில் படுத்து கொண்டு போராட்டம் செய்தார். இதற்கு அவர் கூறிய காரணம் தான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் தான் பிடித்துக் கொடுத்த திருடனை எனது காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியில் விட்டு விட்டனர் எனக்கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.