கேரளாவில் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து காதலன் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் காதலிப்பதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த காதலன் உட்பட  4 பேரை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பாதிக்கப்பட்ட  இளம் பெண்ணின் காதலன் சுமேஷ் என்ற நபரின் நண்பன் சுரேஷ் இளம் பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

ஓர் இரவு இளம் பெண்ணின் வீட்டிற்கு அருகிலேயே அவரை வெளியே அழைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து அவருடைய நண்பர்களான அனூப், அபிஜித் அரவிந்த் ஆகியோரும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் ஜூன் மாதம் சம்பந்தப்பட்ட இளம் பெண் கொடூரமான தாக்குதலுக்கு  அவரது காதலனால் உள்ளானார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவே, குழந்தைகள் நல ஆலோசனை கமிட்டி மூலம் உண்மைகள் அனைத்தும் வெளிவந்தது. இதையடுத்து குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.