திமுக எம்பி கனிமொழி பொதுக்கூட்டத்தில் பேசும்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், கர்நாடகாவில் அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருந்தபோது நான் தமிழனே இல்லை, எனக்கு தமிழ்நாடு பிடிக்காது என்று கூறினார். ஆனால் தமிழகத்தின் சலுகைகள் எல்லாம் பெற்று படித்துவிட்டு ஒரு பதவிக்கு போனதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் மொழிக்கு தமிழ் மக்களுக்கு எதிராக பேசக்கூடியவர் ஒருவர்தான் இன்றைக்கு பாஜக தலைவராக தமிழகத்தில் எங்கே சுற்றி வந்து கொண்டிருக்கிறார் என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.