இன்றைய டிஜிட்டல் உலகத்தில், சமூக ஊடகங்களில் புகழ்பெற பலர் வித்தியாசமான காணொளிகளை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சிலரது நோக்கம் உண்மையை வெளிப்படுத்துவது அல்ல, மாற்றாக பரபரப்பை உருவாக்குவதற்காக உண்மையை மாறுபடுத்துவதே. சமீபத்தில் வெளியாகி வைரலான ஒரு வீடியோ இதற்கு சான்றாக உள்ளது.
“சமோசா கடை எங்கே?” என்று ஒருவர் கேட்க, நற்பண்புடன் வழிகாட்டிய நபரை வீடியோ பதிவு செய்பவர் சமோசா கடைக்கு அழைத்துச் சென்று, வலுக்கட்டாயமாக சமோசா வாங்கிக் கொடுத்து, பின்னர் “கண்ணில் தூசி விழுந்தது” எனக் கூறி கைக்குட்டை கொடுத்து துடைக்கச் சொன்னார். இது அனைத்தும் அந்த நபருக்கு தெரியாமலேயே ரகசியமாக வீடியோ எடுத்து, உதவிய நபரை “பசி என்று கேட்டவருக்கு உதவிய நல்ல உள்ளம் கொண்டவர்” என சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
View this post on Instagram
“>
வீடியோ வைரலான பிறகு தான் உண்மை நிலை தெரிந்த அந்த நபர், “நான் உண்மையில் பசிக்காக ஏதும் கேட்கவில்லை , என்னை மோசமாகப் பயன்படுத்திவிட்டார்கள்” என வேதனையுடன் தெரிவித்தார். இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் நம்பகத்தன்மையற்ற ஃபேக் வீடியோ காட்சிகள் எப்படி ஒரு சாதாரண நபரின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் சிதைக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் விதமாக உருவாக்கப்பட்டது.
இதுபோன்ற செயற்பாடுகள், மனிதநேயத்திற்கும் ஊக்கம் தரும் முயற்சிகளுக்கும் எதிராகச் செயல்படுகின்றன என்பதையும் இந்த சம்பவம் விழிப்புணர்வாக நினைவூட்டுகிறது.
