இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய திரைப்படம். இது மிக நெடிய போராட்டம். நெடும் பயணத்தை தாண்டி படம் திரைக்கு வர உள்ளது. படம் அதீத நாட்கள் எடுத்துக் கொண்டது. நான் வரை ஆண்டு கால உலகத்தில் உருவான இந்த திரைப்படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படங்களில் நடிப்பதை நிறுத்துமாறு கூறியது என்னுடைய பெற்றோர்கள் தான்.

அம்மாவுக்கு தொடக்கத்தில் இருந்தே நான் சினிமாவில் இருப்பதில் துணியும் விருப்பமில்லை. நான் மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். குடும்பத்தில் சேர்ந்து அனைவரும் எடுக்க முடிவு தான் இது. தற்போது அமைச்சராகி விட்டதால் அது ஒரு முழு நேர மக்கள் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. நான் ரெட் ஜெயன்டில் இருந்து வெளியே வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கும் ரெட் ஜெயன்ட்க்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.