தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் கட்டமாக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாதாரண கட்டண தகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் மாநகரம் போக்குவரத்து தனியார் மயமாக்கப்படாது. புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளில் பராமரிப்பு பணி மட்டுமே தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.