திமுக எம்பி கனிமொழியின் கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தற்போது மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரின் உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.