தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா அப்துல்லா. இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளிமயில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா அப்துல்லா திருமணத்தை வெறுப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. எனக்கு ஒருவேளை திருமணம் நடக்கலாம். ஆனால் எனக்கு திருமணத்தின் மீது கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாது.

எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் நிச்சயமாக நான் குழந்தைகளை பெற்றுக்கொள்வேன். கடவுள் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ‌ சூப்பர் பவர் கொடுத்துள்ளதால் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். ஒரு குழந்தையை பெற்றோர் இருவரும் சேர்ந்து வளர்த்தால் தான் நன்றாக இருக்கும். ஆனால் எனக்கு திருமணத்தை நினைத்தால் சற்று பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் திருமணம் மீது நம்பிக்கை இல்லை ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் விருப்பம் என்று நடிகை பிரியா அப்துல்லா கூறியது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.