பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்வதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக அவர்கள் அறிவித்த நிலையில் தற்போது ரன்வீர் மற்றும் தீபிகா இருவரும் விவாகரத்து செய்து பிரிய இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் தீயாக பரவி வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை என அவர்கள் தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது ரன்வீர் மற்றும் தீபிகா இருவரும் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரன்வீர் மற்றும் தீபிகா இருவரும் ஒரு சுற்றுலாவின் போது சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தங்கள் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி அவர்களுடைய விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.