நடிகர் மன்சூர் அலிகானுக்கு கேப்டன் பிரபாகரன்  படம் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தது  இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு நிறைய நடிக்க வாய்ப்புகள் வந்தன. அனைத்து மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், ஏராளமான படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். இவர் ஒரு சில மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில்  நடிகர் மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்துள்ள ‘சரக்கு’ படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சென்சார் கட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது, “இந்த படத்தில் அம்பானி, அதானி பெயர்கள் இருக்கக்கூடாது என கட் கொடுக்கிறார்கள். இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை. தணிக்கை வாரியம் நடுநிலையாக இருக்க வேண்டும். மேலும், நான் ஒன்றும் நெளிகிற புழு இல்லை, மிதித்து கொல்வதற்கு என்று கடுமையாக கூறியுள்ளார்.