இந்தி சினிமாவில் பாடல்களை எழுதும் பழம்பெரும் பாடலாசிரியரான ஜாவித் அக்தர்(78), அண்மையில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்றார். அந்த நாட்டில் பிரபல உருது கவிஞரான பயஸ் அகமது பயசை நினைவுகூரும் அடிப்படையில் நடந்த நிகழ்ச்சியில் அக்தர் பங்கேற்றார்.

இதற்கிடையே நடிகை கங்கனா ரனாவத் தொடர்பாக அண்மையில் அக்தரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கங்கனாவை நான் முக்கியமான நபராக நினைக்கவில்லை. பின் அவர் என்ன முக்கிய விசயம் பற்றி பேசியிருக்க முடியும்? ஆகவே அவரை விட்டு தள்ளுங்கள். அடுத்த விசயத்திற்கு போவோம் என பதில் கூறி உள்ளார்.