மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சோபிதா துலிபாலா. இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் அழகு போட்டிகளில் கலந்துகொண்டும் விருது பெற்றுள்ளார். இந்நிலையில் சோபிதா துலிபாலா அளித்துள்ள பேட்டியில், ”என் அம்மா சொன்ன அழகு குறிப்புகளை பின்பற்றுவதால் தான் எனது முகம் இந்த அளவுக்கு பளபளப்பாக உள்ளது.

அதாவது, கடலை மாவினால் அடிக்கடி பேஸ் பேக் போட்டுக்கொள்கிறேன். பின் புரூட் பல்சுடன் மசாஜ் செய்துகொள்கிறேன். அதேபோன்று பச்சை பாலை கிளன்சிங்காக உபயோகிக்கிறேன். தூய்மையான தேங்காய் எண்ணெய்யை உதடுகளுக்கு பூசிக் கொள்கிறேன். அதன்பின் விளக்கு எண்ணெய்யை புருவங்களுக்கு பிரஷ் செய்கிறேன். இதுதான் என் அழகின் ரகசியம்” என்று அவர் கூறியுள்ளார்..