இயற்கை உலகில் பெரிய உயிரினங்கள் சிறிய உயிர்களை வேட்டையாடுவது சாதாரணம். ஆனால் சில சமயம் இந்த நிலை மாறி, வேட்டையாட வந்த உயிரே வேட்டையாடுபவரின் பலியாகி விடுகிறது. தற்போது இவ்வகையான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில், உணவு தேடி ஒரு சிறிய பாம்பு பறவையின் கூண்டுக்குள் புகுகிறது. அது பறவையின் முட்டைகள் அல்லது குஞ்சுகளைத் தின்ன வந்திருக்கலாம். ஆனால் எதிர்பாராத விதமாகவே அந்தப் பாம்பே அங்கு சிக்கிக் கொள்கிறது.

கூண்டில் இரண்டு பறவைக்குஞ்சுகள் இருந்தன. பாம்பு தாக்குவதற்குள், ஒரு குஞ்சு அதைப் பார்த்தவுடனே அதன் வாலைப் பிடித்து விழுங்கத் தொடங்குகிறது. நடந்தது என்ன என்பதையே புரிந்து கொள்ள முடியாமல் பாம்பு தவிக்கிறது.

குஞ்சுகளின் தோற்றத்தைப் பார்த்தால், அவை ஒரு வகை கழுகு அல்லது பருந்து குஞ்சுகள் என நிபுணர்கள் கருதுகின்றனர். பாம்பு மெதுவாக முழுவதும் குஞ்சின் வாயுக்குள் சென்று விடுகிறது. உயிருடன் போராடிய பாம்பு இறுதியில் பலவீனமடைந்து குஞ்சின் உணவாகி விடுகிறது. மேலும் இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, “இயற்கையின் அதிசயம்!” என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.